sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 சத்யசாயி நுாற்றாண்டு விழா  ஒரு வாரம் கொண்டாட்டம்

/

 சத்யசாயி நுாற்றாண்டு விழா  ஒரு வாரம் கொண்டாட்டம்

 சத்யசாயி நுாற்றாண்டு விழா  ஒரு வாரம் கொண்டாட்டம்

 சத்யசாயி நுாற்றாண்டு விழா  ஒரு வாரம் கொண்டாட்டம்


ADDED : நவ 18, 2025 04:15 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா திருப்பூரில் பல்வேறு சமூக சேவைகளுடன் ஒரு வார விழாவாக நடைபெறுகிறது.

திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், கடந்த, 16ம் தேதி துவங்கிய பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா, வரும், 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

திருப்பூர் -- பி.என்.ரோடு, ராம் நகரிலுள்ள பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா கோவிலில், தினமும் அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நகர சங்கீர்த்தனம், மாலை 5:00 மணிக்கு ருத்ர பாராயணம், தொடர்ந்து, 6:00 மணிக்கு சிறப்பு பஜன் மற்றும் சொற்பொழிவு மற்றும் மங்கள ஆரத்தி நடைபெறுகிறது.

விழாவில், நாளை (19ம் தேதி) மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது. வரும், 22ம் தேதி மரக்கன்று நடும் விழா, முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல், 23ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் வழங்குதல், சிறப்பு நாராயண சேவை உள்ளிட்ட சமூக சேவை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவன தலைவர் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us