sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இணையவழியில் அதிகரிக்கும் மோசடி இனி ஏமாறாமல் இருக்க அறிவுரை

/

இணையவழியில் அதிகரிக்கும் மோசடி இனி ஏமாறாமல் இருக்க அறிவுரை

இணையவழியில் அதிகரிக்கும் மோசடி இனி ஏமாறாமல் இருக்க அறிவுரை

இணையவழியில் அதிகரிக்கும் மோசடி இனி ஏமாறாமல் இருக்க அறிவுரை


ADDED : பிப் 20, 2024 05:02 AM

Google News

ADDED : பிப் 20, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: இணையவழி பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதில், திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த தொழில்துறையினர் துவங்கி தொழிலாளர், மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, போலி செயலிகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. விழிப்புணர்வு இல்லையேல் ஏமாறுவது நிச்சயம்.

இது குறித்து, திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக, சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மக்களின் அறியாமை, பேராசை போன்றவற்றை பயன்படுத்தி, கும்பல்கள் பணத்தை எளிமையாக மோசடி செய்கின்றன.

போலீஸ் தரப்பில் விழிப்புணர்வு செய்தாலும், படிக்காதவர்களை விட, படித்தவர்களே ஏமாறுகின்றனர்.

அரசு ஊழியர், டாக்டர், ஐ.டி., ஊழியர் என, பல உயர் பொறுப்புகளில் இருப்பவர்களும் தங்கள் நீண்ட கால சேமிப்பை இழந்து வருகின்றனர். சில மோசடிகளில் வெளியே தெரிந்தால், அசிங்கமாக இருக்கும் என, புகார்கள் வருவதில்லை.

சமீப காலமாக, பங்குச்சந்தை முதலீடு, ஓட்டல் ரீவ்யூ, விளம்பர 'டாஸ்க்'குகளை முடிப்பது போன்ற பாணியில், பணத்தை பறிக்கின்றனர். இதுதவிர, போலீஸ் உயரதிகாரிகள் பேசுவதாக கூறி ஏமாற்றுகின்றனர்.

எக்காரணத்தை கொண்டு வங்கி விபரங்களை பகிரக்கூடாது. ஏதாவது சந்தேகப்படும் வகையில் இருந்தால், உடனடியாக போலீசாரை அணுக வேண்டும்.

அதிகம் லாபம் வருவது போன்ற விளம்பரத்தை நம்பி, முதலீடு செய்ய வேண்டாம். பங்கு சந்தை முதலீடு, கடன் செயலி போன்றவை சீன நாட்டை சேர்ந்தவைகள். இவற்றை வெளிநாடுகளில் இருந்தபடி இயக்குகின்றனர்.

பணப்பரிமாற்றம் போன்றவற்றை மேற்கொள்ள, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ளவர்களின் வங்கிக்கணக்குகளை இயக்கி, அதன் வாயிலாக பணத்தை எடுக்கின்றனர்.

நம்மிடம் இருந்து எடுக்கப்படும் பணம், உடனடியாக, 'கிரிப்டோ கரன்சி' உள்பட பலவிதங்களில் மாற்றி எடுத்து விடுகின்றனர். இந்த பணத்தை மீட்க மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

மக்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும், தங்கள் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பகிர்வதோ, யாருக்கும் தெரியப்படுத்துவதோ கூடாது. சந்தேகங்கள் இருந்தால், உடனடியாக சைபர் கிரைம் போலீசாரை அணுக வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us