/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் உயர்ந்தது கலைப்பிரிவு குறைந்தது
/
அறிவியல் உயர்ந்தது கலைப்பிரிவு குறைந்தது
ADDED : மே 09, 2025 11:56 PM
திருப்பூர்: கடந்த, 2024ல் அதிகபட்சமாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில், 654 பேர் சென்டம் பெற்றனர்.
இந்த எண்ணிக்கை நடப்பாண்டு, 713 ஆக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு கணிதத்தில், 157 பேரும், இயற்பியலில், 27 பேரும், வேதியியலில், 23 பேரும், உயிரியலில் ஆறு பேர் சென்டம் பெற்றனர்; நடப்பாண்டு இந்நான்கு பாடங்களில் சென்டம் உயர்ந்துள்ளது. அதன்படி, கணிதம், 183, இயற்பியல், 48, வேதியியல், 107, உயிரியலில், 15 பேர் சென்டம் பெற்றுள்ளனர்.
கடந்த முறை புள்ளியியல், நான்கு பேர் நுாற்றுக்கு நுாறு பேர் பெற்றனர். இம்முறை யாரும் பெறவில்லை. கடந்தமுறை விலங்கியலில் யாரும் சென்டம் பெறாமல் இருந்தனர்; இம்முறை ஒருவர் பெற்றுள்ளார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில், 340 ஆக இருந்த சென்டம், 467 ஆக உயர்ந்துள்ளது.
சரிந்த கலைப்பிரிவுகள்
பொருளியல் பாடத்தில் கடந்தாண்டு, 313 பேர் சென்டம் பெற்றனர்; இம்முறை, 67 பேர் மட்டுமே சென்டம் பெற்றுள்ளனர். வணிகவியலில், 591 ஆக இருந்த சென்டம், 120 ஆக குறைந்துள்ளது; கணக்குபதிவியலில் 203 இருந்த சென்டம், 118 ஆக குறைந்துள்ளது.
கடந்த முறை தமிழில் இருவரும், ஆங்கிலத்தில், மூன்று பேரும் சென்டம் பெற்றிருந்தனர். இம்முறை தமிழில், இருவரும், ஆங்கிலத்தில், ஆறு பேரும் சென்டம் பெற்றுள்ளனர்.

