sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கழிப்பிடம் அருகே காய்கறி விற்பனை; வாரச்சந்தையில் இப்படியும் அவலம்

/

கழிப்பிடம் அருகே காய்கறி விற்பனை; வாரச்சந்தையில் இப்படியும் அவலம்

கழிப்பிடம் அருகே காய்கறி விற்பனை; வாரச்சந்தையில் இப்படியும் அவலம்

கழிப்பிடம் அருகே காய்கறி விற்பனை; வாரச்சந்தையில் இப்படியும் அவலம்


ADDED : நவ 14, 2024 11:35 PM

Google News

ADDED : நவ 14, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம் ; பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாட்களில் நடக்கும் சந்தைக்கு என, தினசரி மார்க்கெட் அருகே பிரத்யேக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சந்தையில் கடை அமைக்க போதிய இடம் இன்றி, வியாபாரிகள் பலர், சந்தை வளாகத்தில் நடைபாதியிலேயே கடை அமைத்து விற்பனையில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு, போதிய இடம் இன்றி கழிப்பிடம் அருகிலும் காய்கறி விற்பனையில் ஈடுபடுகின்றனர். நடைபாதையில் மேற்கூரை இல்லாததால், மழை காலங்களில், வியாபாரம் செய்வதில் இடையூறு ஏற்படுகிறது.

ஒரு நாள் வியாபாரத்தை நம்பி வரும் வியாபாரிகள் பலர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இங்குள்ள கழிப்பிடம் போதிய பராமரிப்பு இன்றி, மோசமான நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் வாரச்சந்தையில், சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, கூடுதல் கடைகளை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பொதுமக்கள் இடையூறு இன்றி வந்து செல்லவும் உண்டான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us