ADDED : ஆக 20, 2025 01:09 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரியில் பாலின உளவியல் கண்காணிப்பு, விழிப்புணர்வு மன்றம் சார்பில் கருத்தரங்கு நடந்தது.
பாலின சமத்துவத்துக்கு தேவையானது அரசின் சட்டங்களா, தனிமனித திட்டங்களா என்ற விவாத நிகழ்ச்சி நடந்தது.
அரசின் சட்டங்களே என்ற தலைப்பில் விஜயராஜ், சுபஸ்ரீ, வரதராஜன், சுரேந்தர்; தனிமனித திட்டங்களே என தனலட்சுமி, சுரேகா, கிரிஜா, ஜெகதீஸ்வரன் பேசினர்.
நுாலகர் சித்ரா தவப்புதல்வி, வணிகவியல் துறை தலைவர் அமிர்தராணி, பேராசிரியர் பர்வீன் பானு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
