sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடிநீர் கடும் பஞ்சம்... கழிவுநீர் சாலையில் 'தஞ்சம்'

/

குடிநீர் கடும் பஞ்சம்... கழிவுநீர் சாலையில் 'தஞ்சம்'

குடிநீர் கடும் பஞ்சம்... கழிவுநீர் சாலையில் 'தஞ்சம்'

குடிநீர் கடும் பஞ்சம்... கழிவுநீர் சாலையில் 'தஞ்சம்'


ADDED : பிப் 16, 2024 01:01 AM

Google News

ADDED : பிப் 16, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;பொங்குபாளையம் ஊராட்சி,4வது வார்டுக்கு உட்பட்டது பள்ளிபாளையம். இதில் எஸ்.ஆர்.வி., கார்டன்ஸ் குடியிருப்பு பகுதி உள்ளது.

இதில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் சார்பில் குடிநீர் தொட்டி மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இது முறைப்படி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிக்கு ஆறு மாதத்துக்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், லாரிகளின் குடிநீர் வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது. சில சமயங்களில் 2 கி.மீ., துாரம் சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை உள்ளது.

மேலும் முறையான கழிவுநீர் வடிகாலும் அமைக்கப்படாமல், ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், பாதையைப் பயன்படுத்த முடியாத நிலையும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரி, கலெக்டரிடம் குறை கேட்பு நாளிலும் அப்பகுதியினர் மனு அளித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.

அப்பகுதியினர் கூறியதாவது:

வெளியூர் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தான் இங்கு பெரும்பாலும் வீடு கட்டி வசிக்கிறோம். வார்டு கவுன்சிலர், ஊராட்சி தலைவர், செயலாளர் ஆகியோர் எங்கள் பகுதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் அணுகுகின்றனர்.

குடிநீருக்கு படும் சிரமம் குறித்து மாதக்கணக்கில் வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பகுதிக்கு எதுவும் செய்ய முடியாது என ஊராட்சி நிர்வாகம் கை விரித்து விட்டது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us