sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மழைநீருடன் கழிவுநீர் 'குளம்'

/

மழைநீருடன் கழிவுநீர் 'குளம்'

மழைநீருடன் கழிவுநீர் 'குளம்'

மழைநீருடன் கழிவுநீர் 'குளம்'


ADDED : மே 13, 2025 12:18 AM

Google News

ADDED : மே 13, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்ணீர் வீண்

மங்கலம் ரோடு, கருவம்பாளையம் ரவுண்டானா வளைவில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமடைந்துள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- வின்சென்ட்ராஜ், கருவம்பாளையம்.

n ஊத்துக்குளி ரோடு, கருமாரம்பாளையம், பரமசிவன் கோவில் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

- மேகலா, கருமாரம்பாளையம்.

ஒயரில் செடி

குமரன் ரோடு, நொய்யல் பாலத்தின் கீழ் இருந்து செடிகள் வளர்ந்து, கேபிள் ஒயர்களில் படர்ந்துள்ளது. செடிகளை அகற்ற வேண்டும்.

- ராஜூ, குமரன் ரோடு.

மரத்துக்கு ஆபத்து

அங்கேரிபாளையம் மெயின் ரோட்டில் மர்மநபர்களால் இரவில் நன்கு வளர்ந்து நிழல் தரும் மரங்கள் வெட்டப்படுகிறது. மரங்களை வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நாதன், அங்கேரிபாளையம்.

அபாய மின்கம்பம்

தாராபுரம் ரோடு, கோபால் நகர் ஐந்தாவது வீதியில் விரிசல் ஏற்பட்டு விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. மின் விபத்து ஏற்படும் முன், கம்பத்தை மாற்ற வேண்டும்.

- ஷியாம்ரக் ஷன், கோபால் நகர்.

n அவிநாசி, எஸ்.மேட்டுப்பாளையத்தில் கம்பி துருப்பிடித்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. கம்பத்தை மாற்ற வேண்டும்.

- ஈஸ்வரன், எஸ்.மேட்டுப்பாளையம்.

மழைநீர் தேக்கம்

அவிநாசி - மங்கலம் ரோடு, பை-பாஸ் பாலத்தின் கீழ் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பால், மழை பெய்யும் போது மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்குகிறது.

- மகேஷ்குமார், மங்கலம்.

குழாய் அடைப்பு

குமரன் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை பாலத்தில் மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால், மழைநீருடன் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது.

- அருணாசலம், அரிசிக்கடை வீதி.

எப்படி செல்வது?

தென்னம்பாளையம், நாவிதன் தோட்டம் முதல் வீதி பாலத்தின் ஒருபுறம் பெரிய குப்பை தொட்டியும், மறுபுறம் வாகனங்களும் இடையூறாக நிறுத்தப்படுகிறது. வாகனங்கள் சென்று வர வழியில்லாமல் உள்ளது.

- ஜோதிகுமார், நாவிதன்தோட்டம்.

ரியாக் ஷன்

ஒளிமயம்

திருப்பூர், சிங்காரவேலன் நகர், பழைய எஸ்.பி., அலுவலக வீதியில் தெருவிளக்கு எரியாமல், கும்மிருட்டாக இருப்பது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி மூலம் தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு, எரிகிறது.

- லோகநாதன், செல்வலட்சுமி நகர்.

n திருப்பூர், நல்லுார் - பொன்முத்து நகர் மூன்றாவது வீதியில் தெருவிளக்கு எரியாமல் இருள்சூழ்ந்து காணப்பட்டது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், புதிய விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.

- செந்தில்குமார், பொன்முத்து நகர்.

புதிய சாலை

அவிநாசி, சாய்பாபா காலனி, அய்யப்பன் கோவில் அருகே ஜல்லி கொட்டி ரோடு போடாமல் இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. புதிய தார் ரோடு போட்டுள்ளனர்.

- மணி, அவிநாசி.






      Dinamalar
      Follow us