/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரதான ரோட்டில் கழிவு நீர் தேக்கம்
/
பிரதான ரோட்டில் கழிவு நீர் தேக்கம்
ADDED : செப் 24, 2024 11:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை - தாராபுரம் ரோட்டில், பாதாள சாக்கடை உடைப்பு காரணமாக சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.
உடுமலை - தாராபுரம் ரோட்டில், ஏராளமான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த ரோட்டில் அமைந்துள்ள பாதாளச்சாக்கடை குழாய், ஆளிறங்கும் குழி உடைப்பு ஏற்பட்டுள்ளதோடு, திட்ட குளறுபடி காரணமாக கழிவு நீர் வெளியேறி வருகிறது.
பிரதான ரோட்டில் குளம் போல் தேங்கும் கழிவு நீரால், துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. மாதக்கணக்கில் கழிவு நீர் ரோட்டில் ஓடி வரும் நிலையில், நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.