sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கழிவுநீர் தேக்கம் ; மக்கள் அவதி

/

கழிவுநீர் தேக்கம் ; மக்கள் அவதி

கழிவுநீர் தேக்கம் ; மக்கள் அவதி

கழிவுநீர் தேக்கம் ; மக்கள் அவதி


ADDED : ஜன 16, 2025 11:25 PM

Google News

ADDED : ஜன 16, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் - பல்லடம் ரோடு வித்யாலயம், வீரபாண்டி பிரிவு ஆகிய பகுதிகளில் ரோட்டோரம் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.இப்பகுதியில் சேகரமாகும் மழைநீர் மற்றும் கழிவு நீர் இந்த வடிகால் வழியாகச் சென்று, பிரதான கால்வாயில் சேரும் வகையில் உள்ளது.

இதில் வித்யாலயம் பஸ் ஸ்டாப் அருகே வடிகாலில் பெருமளவு கழிவுகள் தேங்கி, கழிவு நீர் செல்ல முடியாமல் பல நேரங்களில் அடைப்பு ஏற்படுகிறது.துாய்மைப் பணியாளர்கள் சில சமயங்களில் அவற்றை துார் வாரி, திடக்கழிவுகளை அகற்றி, அருகிலேயே போட்டுச் சென்று விடுகின்றனர்.

இதனால், அக்கழிவுகள் மீண்டும் வடிகாலுக்குள் விழுந்து அடைத்துக் கொள்கிறது.பஸ் ஸ்டாப் அருகே, பெரும்பாலான நேரம், கழிவு நீர் ரோட்டில் சென்று பாய்கிறது. கடும்துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது.கால்வாய் முறையாக துார் வாரி, கழிவு நீர் தேங்காமல் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us