/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சனி மஹா பிரதோஷம்: சிவாலயங்கள் கோலாகலம்
/
சனி மஹா பிரதோஷம்: சிவாலயங்கள் கோலாகலம்
ADDED : டிச 29, 2024 08:07 AM

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சனி மஹா பிரதோஷத்தையொட்டி, 1000 லிட்டர் பாலில் அபிேஷகம் நடந்தது.
சனி மஹாபிரதோஷமான நேற்று, சிவாலயங்களில் மஹா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மாலை, 4:00 மணிக்கு மூலவருக்கும், 4:30 மணிக்கு அதிகார நந்திக்கும் அபிேஷகம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, உமாமகேஸ்வரர்
உற்சவமூர்த்திகளுக்கு, 1,000 லிட்டர் பால் உட்பட மகா அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றன்; அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
* திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம் ஆவுடைநாயகி அம்மன் சமேத ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில், நேற்று மாலை சிவனடியார்களின் கயிலாய வாத்திய இசையுடன், மூலவர் மற்றும் அதிகாரநந்திகளுக்கு மஹா அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன், உற்சவமூர்த்திகள் கோவிலை வலம்வந்து அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சனி மஹா பிரதோஷமான நேற்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் உட்பட திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று எம்பெருமானை வழிபட்டனர்.
---