sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கடையடைப்பு! கிராமங்களில் குப்பை கொட்ட எதிர்ப்பு

/

கடையடைப்பு! கிராமங்களில் குப்பை கொட்ட எதிர்ப்பு

கடையடைப்பு! கிராமங்களில் குப்பை கொட்ட எதிர்ப்பு

கடையடைப்பு! கிராமங்களில் குப்பை கொட்ட எதிர்ப்பு


ADDED : அக் 29, 2025 12:56 AM

Google News

ADDED : அக் 29, 2025 12:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்: கிராமப் பகுதிகளில், மாநகராட்சி குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மற்றும் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நான்கு ஊராட்சி களில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

திருப்பூர் அருகே இடுவாய் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பைகளை தரம் பிரித்து, திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்வதற்கான மையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கிய போது, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கைது நடவடிக்கை பாய்ந்தது. இதனை தொடர்ந்து, ஆலோசனையில் ஈடுபட்ட கிராம மக்கள், முதல் கட்டமாக, இடுவாய் உட்பட, ஆறுமுத்தாம்பாளையம், 63 வேலம்பாளையம், கரைப்புதுார் ஊராட்சிகளை இணைத்து, கடையடைப்பு போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அவ்வகையில், நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடுவாய் மற்றும் 63 வேலம்பாளையம் கிராமங்களில், முழுமையான கடையடைப்பு போராட்டம் நடந்த நிலையில், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார் கிராமங்களில் கடையடைப்பு போராட்டம் பிசுபிசுத்தது. சில இடங்களைத் தவிர்த்து, பெரும்பாலும் கடைகள் திறந்திருந்தன.

இப்பகுதிகளைச் சார்ந்த பனியன் நிறுவனங்கள், விசைத்தறிக்கூடங்கள், கல்குவாரி, கிரசர் நிறுவனங்கள் உள்ளிட்டவையும், கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, செயல்படாமல் இருந்தன. பெரும்பாலான ஆட்டோ, கார் மற்றும் டிராவல்ஸ் உரிமையாளர்களும் வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர்.

வழக்கு தொரட முடிவு

எங்களது முன்னோர்கள், கல்வி சேவைக்காக, திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு வழங்கிய நிலத்தை, மாநகராட்சி நிர்வாகம், முறைகேடாக பெயர் மாற்றம் செய்து, தற்போது, அதில் குப்பைகளைக் கொட்டி கிராமத்தை அழிக்க நினைக்கிறது. அதற்கு ஒருபோதும் விட மாட்டோம். முதல் கட்டமாக, கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளோம். கிராமப் பகுதிகளில் எங்குமே மாநகராட்சியின் குப்பைகள் கொட்டக்கூடாது என்பதற்காக, பிரத்யேக குழு ஆரம்பித்து, பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாசன விவசாயிகள், விவசாய சங்கம், குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில், அடுத்த கட்ட போராட்டமும் நடத்த ஆலோசித்து வருகிறோம். - போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள்








      Dinamalar
      Follow us