/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாடலிங்' ஆசை காட்டி ரூ.35 ஆயிரம் கைவரிசை
/
'மாடலிங்' ஆசை காட்டி ரூ.35 ஆயிரம் கைவரிசை
ADDED : ஜூலை 09, 2025 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூரில் இளம்பெண்ணிடம் மாடலிங் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதாக கூறி, 35 ஆயிரம் ரூபாயை கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்த இளம்பெண், பியூட்டஷியனாக பணியாற்றுகிறார். இவர் மற்றும் இவரது தோழியிடம் போனில் கணேஷ் என்பவர் அறிமுகமாகி, மாடலிங் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்கு பெயர் பதிவு செய்வதாக கூறி, 35 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றினார். இதுதொடர்பாக திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, கோவை, நாகமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கவுதம், 33 என்பவரை கைது செய்தனர்.