/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் குண்டு வீசிய எழுத்தர் சுற்றிவளைப்பு
/
சார் - பதிவாளர் அலுவலகத்தில் குண்டு வீசிய எழுத்தர் சுற்றிவளைப்பு
சார் - பதிவாளர் அலுவலகத்தில் குண்டு வீசிய எழுத்தர் சுற்றிவளைப்பு
சார் - பதிவாளர் அலுவலகத்தில் குண்டு வீசிய எழுத்தர் சுற்றிவளைப்பு
ADDED : மார் 11, 2026 06:37 AM

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உ டுமலை, சார் - பதிவாளர் அலுவலகம் முன், நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதில், அலுவலக நுழைவாயில் இரும்பு கேட் பகுதியில் இருந்த குப்பை, தீப்பற்றி எரிந்து, கேட் கருகியது. சார் - பதிவாளர் தினேஷ் புகாரில், உடுமலை போலீசார், லோகேஷ், 27, என்பவரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
குடிமங்கலம், கொண்டம்பட்டியில், ' எம்.ஜி.எம்., குரூப் ஆப் கம்பென ி ' உரிமையாளர் மணிமாறனுக்கு சொந்தமான, 20 ஏக்கர் நிலத்தை, அன்னபூரணி என்பவர், 'நிலத்தின் உண்மையான உரிமையாளர் மணிமாறன் இறந்து விட்டார்.
அவர் என் தந்தை எனக்கூறி, இறப்புச்சான்று, வாரிசு சான்று பெற்று, 2024ல், அவரது மகள்களுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
மேற்படி நிலத்தை மீண்டும் விற்பனை செய்வதற்காக, பத்திர எழுத்தர், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரான லோகேஷ் முயற்சித்துள்ளார். சார் - பதிவாளர் தினேஷ், பத்திரப்பதிவு செய்ய மறுத்துள்ளார்.
இதில், ஆத்திரமடைந்த லோகேஷ், சார் - பதிவாளர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

