/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு; பெட்டியில் புடவை வைத்து பூஜை
/
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு; பெட்டியில் புடவை வைத்து பூஜை
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு; பெட்டியில் புடவை வைத்து பூஜை
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு; பெட்டியில் புடவை வைத்து பூஜை
ADDED : செப் 26, 2024 02:33 PM

காங்கேயம்: காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் புடவை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. சிவன்மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரணமூர்த்தி என்ற பெயர் உள்ளது.
இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு,நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம் சர்க்கரை, கணக்கு நோட்டு, பூமாலை, இருப்பு சங்கிலி, ருத்தரட்சம் என பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது அவ்வாறு வைத்து பூஜை செய்யப்படும் பொருள் சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி முதல் இரு இளநீர்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வீரணம் கிராமம் சிவக்குமார்(30)என்ற பக்தரின் கனவில் சிவப்புநிற புடவை வைக்க உத்திரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் புடவை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இது பற்றி கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறியதாவது: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதே அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். புடவை வைத்துள்ளதால் இதன் விலை மற்றும் ஜவுளி உற்பத்தி, நெசவு தொழிலில் மாற்றம் வரும். இதன் தாக்கம் போக போக தான் தெரியவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

