sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மங்கலம் சாலையில் சிறு பாலங்கள்

/

மங்கலம் சாலையில் சிறு பாலங்கள்

மங்கலம் சாலையில் சிறு பாலங்கள்

மங்கலம் சாலையில் சிறு பாலங்கள்


ADDED : டிச 09, 2024 04:57 AM

Google News

ADDED : டிச 09, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: நீர் கசிவால் தார்ரோடு சேதமடைவதை தடுக்க, சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே, இரண்டு சிறுபாலம் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறை துவக்கியது.

திருப்பூர் - மங்கலம் இடையேயான மாநில நெடுஞ்சாலைத்துறை ரோட்டில், ஊராட்சி பகுதியில் ரோடு நன்றாக இருக்கிறது. ஆனால், பாதாள சாக்கடை பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி காரணமாக, மாநகராட்சி எல்லையில், பல்வேறு இடங்களில் ரோடு குண்டும், குழியுமாக மாறி விட்டது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாரப்பாளையம் முதல் பெரியாண்டிபாளையம் வரை, நான்கு வழிச்சாலையோக மேம்படுத்தப்பட்டுள்ளது. அடுத்துள்ள சேனா பள்ளம் முதல் கோழிப்பண்ணை, லிட்டில் பிளவர் பள்ளி முதல், குளத்துக்கடை வரையில் உள்ள ரோடு, சின்னாண்டிபாளையம் பிரிவு பகுதிகளில், ரோடு சேதமாகியுள்ளது.

இடுவாய் சுற்றுப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், சிற்றோடைகள் வழியாக ஆண்டிபாளையம் குளத்துக்கு வருகிறது. பாதாள சாக்கடை கால்வாய் சுத்திகரிப்பு மையம் அமைத்த போது, கால்வாய் அடைக்கப்பட்டது. ரோட்டின் தெற்கு பகுதியில் தேங்கி நிற்பதால், தண்ணீர் கசிந்து, ரோட்டில் தேங்கி, குளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. ஒருமழை பெய்தாலும், பல மாதங்களுக்கு இதே நிலை தொடர்கிறது. இதனால், அடிக்கடி ரோடு சேதமாகி, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சிறு கால்வாய் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.

----

2 படங்கள்

சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே இரண்டு இடங்களில் சிறு பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

ரூ.2.08 கோடியில் திட்டம்

இனி சாலை சேதமாகாதுசின்னாண்டிபாளையம் பிரிவு அருகே, மழைநீர் கசிந்து, ரோடு அடிக்கடி சேதமாகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், இருவேறு இடங்களில், ரோட்டின் குறுக்கே சிறுபாலம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் 2.08 கோடியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், ரோட்டின் தென்புறம் தேங்கும் மழைநீர், பாலம் வழியாக சென்று, வடபுறம் உள்ள குளத்துக்குள் கலந்துவிடும்; 400 மீட்டருக்கு ரோடும் உயர்த்தி அமைக்கப்பட இருப்பதால், அடிக்கடி சேதமாவதும் தடுக்கப்படும்.- நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.








      Dinamalar
      Follow us