sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு

/

ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு

ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு

ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி நிர்வாகிகள் நாளை பதவியேற்பு


ADDED : ஜூலை 04, 2025 11:15 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள், நாளை பொறுப்பேற்கின்றனர்.

ஆண்டுதோறும், ஜூலை முதல் தேதி, ரோட்டரி சங்கங்களின் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொள்வர். அந்த வகையில், திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா, நாளை, காலை, 10.00 மணிக்கு திருப்பூர் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி., சி.பி.எஸ்.இ., பள்ளி அரங்கில் நடைபெற உள்ளது.

சங்கத்தின் புதிய தலைவராக, அருள்செல்வம் (சக்ரவர்த்தி பிளாஸ்டிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர்), நிர்வாக செயலாளராக டாக்டர் பொம்முசாமி, தொடர்பு செயலாளராக ஹேமந்த்குமார், பொருளாளராக செல்வம் மற்றும் செயற்குழு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்கின்றனர்.

மும்பையை சேர்ந்த முன்னாள் ரோட்டரி ஆளுநர் சிவராஜ், கவுரவ விருந்தினராக ஐ.எம்.ஏ., முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் முருகநாநன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ரோட்டரி மாவட்ட பொது செயலாளர் சிவப்பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் வக்கீல் லோகநாதன், மண்டல் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தஜோதி, உதவி ஆளுநர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 'விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது' என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us