sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

எரியூட்டப்படும் குப்பையால் புகை மூட்டம் வாகன ஓட்டிகள் - பொதுமக்கள் அவதி

/

எரியூட்டப்படும் குப்பையால் புகை மூட்டம் வாகன ஓட்டிகள் - பொதுமக்கள் அவதி

எரியூட்டப்படும் குப்பையால் புகை மூட்டம் வாகன ஓட்டிகள் - பொதுமக்கள் அவதி

எரியூட்டப்படும் குப்பையால் புகை மூட்டம் வாகன ஓட்டிகள் - பொதுமக்கள் அவதி


ADDED : மே 11, 2025 12:59 AM

Google News

ADDED : மே 11, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வரும் நிலையில், இரவு நேரங்களில் சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைப்பது, சாலையோரங்களில் உள்ள கால்வாய், பாலத்திற்கு அடியில் குப்பைகளை கொட்டுவது போன்ற அத்துமீறல்களில் பலரும் ஈடுபடுகின்றனர்; இதனால், சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.

தொழில் நகரான திருப்பூரில், சரியான கழிவுநீர் கால்வாய் கட்டுமானங்கள் இல்லாதது; கால்வாயில் வழிந்தோடும் கழிவுநீரை வெளியேற்ற போதிய கட்டமைப்பு இல்லாதது; வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பல காரணங்களால் காற்றுமாசு என்பது அதிகம்.இது ஒருபுறமிருக்க, கிராம ஊராட்சிகள், நகர்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகத்தினர், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு, கடை மற்றும் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதற்கோ, அவற்றை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக அகற்றுவதற்கோ எவ்வித கட்டமைப்பும் இல்லாத நிலையில், சாலையோரம் கொட்டி விடுகின்றனர்.குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் சாலையோரம் குப்பைகளை குவியலாக கொட்டி, எரியூட்டி விடுகின்றனர்.

இதனால், எழும் துர்நாற்றத்துடன் கூடிய புகையை சுவாசித்த படியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பாடும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக, அவிநாசி - வஞ்சிபாளையம் ரோடு, கணியாம்பூண்டி ரோடு, பை-பாஸ் சர்வீஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில், குப்பை கொட்டி, எரியூட்டுகின்றனர்.எனவே, உள்ளாட்சி நிர்வாகத்தினர், இத்தகைய செயலில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அபராதம் விதிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us