sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பயனாளிகளின் விவரம் சேகரிக்க தொழில்நுட்ப வசதி சமூக நல அலுவலர்கள் எதிர்பார்ப்பு

/

பயனாளிகளின் விவரம் சேகரிக்க தொழில்நுட்ப வசதி சமூக நல அலுவலர்கள் எதிர்பார்ப்பு

பயனாளிகளின் விவரம் சேகரிக்க தொழில்நுட்ப வசதி சமூக நல அலுவலர்கள் எதிர்பார்ப்பு

பயனாளிகளின் விவரம் சேகரிக்க தொழில்நுட்ப வசதி சமூக நல அலுவலர்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஆக 28, 2025 11:08 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை, ; சமூக நலத்துறை அலுவலர்களுக்கு, பயனாளிகளின் விவரங்களை பராமரிக்க, ஆன்லைன் சேவையுடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமூக நலத்துறையின் கீழ், இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம், முதிர் கன்னிகள், மற்றும் விதவை பெண் மறுவாழ்வு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஒவ்வொரு திட்டத்திலும், ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும்பட்ட மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர். ஒன்றிய அலுவலகங்களில், திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய நிர்வாகத்தில், அனைத்து திட்ட அலுவலர்களும் பொதுவாக பயன்படுத்தவே கம்ப்யூட்டர் வசதியுள்ளது. தனிப்பட்ட துறைகளுக்கென இவ்வசதியில்லாததால், பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன.

சமூக நலத்துறை சார்ந்த திட்டங்களுக்கு இ-சேவை மையங்களில் ஆன்லைன் வாயிலாக, பயனாளிகள் பதிவு செய்கின்றனர். அவ்வாறு செய்த பின்பு, பதிவு செய்வதற்கு வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை, ஒன்றியங்களில் உள்ள சமூக நலத்துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். இந்நடைமுறை பலருக்கும் தெரிவதில்லை.

இதனால் உதவித்தொகை பெற பதிவு செய்வது, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் தெரிவதில்லை.

இறுதி நேரத்தில், கம்ப்யூட்டர் பதிவில் பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் சமயத்தில் மட்டுமே, இந்த குளறுபடிகளை நலத்துறை பணியாளர்கள் கண்டறிகின்றனர். ஆன்லைன் பதிவுகளிலிருந்து பயனாளிகளின் தொலைபேசி எண்களை கண்டறிந்து பணியாளர்கள் அவர்களுக்கு அழைக்கின்றனர்.அனைத்து நலத்திட்டங்களுமே ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்படுவதால், இத்துறையினருக்கு இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அவசியமாகியுள்ளது.

பயனாளிகளின் விபரங்களை அறியவும், விவரங்களை முழுமையாக பதிவு செய்யவும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ஆன்லைன் வசதி தேவை என, பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us