/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பதிவேடுகளை குறைக்க தொழில்நுட்ப வசதி தேவை! சமூக நலத்துறை பணியாளர்கள் எதிர்பார்ப்பு
/
பதிவேடுகளை குறைக்க தொழில்நுட்ப வசதி தேவை! சமூக நலத்துறை பணியாளர்கள் எதிர்பார்ப்பு
பதிவேடுகளை குறைக்க தொழில்நுட்ப வசதி தேவை! சமூக நலத்துறை பணியாளர்கள் எதிர்பார்ப்பு
பதிவேடுகளை குறைக்க தொழில்நுட்ப வசதி தேவை! சமூக நலத்துறை பணியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 06, 2024 09:46 PM
உடுமலை; சமூக நலத்துறை அலுவலர்களுக்கு, பயனாளிகளின் விபரங்களை பரா மரிப்பதற்கு, தொழில்நுட்ப வசதி அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தப் பட்டுள்ளது.
சமூக நலத்துறையில் இரண்டு பெண் குழந்தைகளுக்கான திட்டம், முதிர் கன்னிகள் மற்றும் விதவை பெண் மறுவாழ்வு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின் றன.
ஒவ்வொரு திட்டத்திலும், ஒன்றியம் வாரியாக ஆயிரத்துக்கும்பட்ட மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர். திட்டப்பணிகளை மேற்கொள்வதற்கு, ஒன்றியங்களில் திட்டப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனைத்து துறைகளிலும், தொழில்நுட்பத்தின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், இத்துறையில் இன்னும் பதிவேடுகளின் வாயிலாகவே, பயனாளிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், அலுவலர்களுக்கு பணிச்சுமை கூடுவதுடன், பயனாளிகளின் விபரங்களும் கிலோ கணக்கில் பதிவுகளாக அலுவலகங்களில் குவிந்து வருகிறது. மேலும், சமூக நலத்துறை சார்ந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கு, இ - சேவை மையங்களில் ஆன்லைனில் பயனாளிகள் பதிவு செய்கின்றனர்.
அவ்வாறு செய்த பின், பதிவு செய்வதற்கு வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டை ஒன்றியங்களில் உள்ள சமூக நலத்துறை அலுவலர்களிடம் வழங்க வேண்டும். இந்நடைமுறை பலருக்கும் தெரிவதில்லை.
சேவை மையங்களிலும், பயனாளிகளுக்கு இதுகுறித்து விபரங்களை கூறுவதில்லை. இதனால், பலரும், ஒப்புகைச்சீட்டை சமூக நலத்துறை அலுவலர்களிடம் சமர்ப்பிக்காமல் வைத்துக்கொள்கின்றனர்.
இந்த அலட்சியத்தால், உதவித்தொகை பெற பதிவு செய்தது குறித்து, அலுவலர்களுக்கும் தெரிவதில்லை.
இறுதி நேரத்தில், கம்ப்யூட்டர் பதிவில் பயனாளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் சமயத்தில் மட்டுமே, இந்த குளறுபடிகளை நலத்துறை பணியாளர்கள் கண்டறிகின்றனர்.
ஆன்லைன் பதிவுகளிலிருந்து பயனாளிகளின் தொலைபேசி எண்களை கண்டறிந்து, பணியாளர்கள் அவர்களை அழைக்கின்றனர். தற்போது அனைத்துமே ஆன்லைன் என்றாகி விட்டதால், இத்துறை பணியாளர்களுக்கும் தொழில்நுட்ப வசதி கட்டாய தேவையாக உள்ளது.
பயனாளிகளின் விபரங்களை அறியவும், முழுமையாக பதிவு செய்யவும், பணிகளை விரைந்து முடிப்பதற்கும், சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என, பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.