/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெற்ற தாயை 'அனாதை' எனக்கூறிய மகன்; முதியோர் இல்லத்தில் விட்டுச்சென்ற கொடுமை
/
பெற்ற தாயை 'அனாதை' எனக்கூறிய மகன்; முதியோர் இல்லத்தில் விட்டுச்சென்ற கொடுமை
பெற்ற தாயை 'அனாதை' எனக்கூறிய மகன்; முதியோர் இல்லத்தில் விட்டுச்சென்ற கொடுமை
பெற்ற தாயை 'அனாதை' எனக்கூறிய மகன்; முதியோர் இல்லத்தில் விட்டுச்சென்ற கொடுமை
ADDED : ஆக 20, 2025 11:11 PM

''இ ந்த வயசான அம்மா ரோட்டோரம் அனாதையா உட்கார்ந்திருந்தாங்க. நீங்க முதியோர் இல்லம் நடத்தறது தெரிஞ்சு இங்க கூட்டிட்டு வந்தேன்,'' என கூறியபடி, மூதாட்டி ஒருவரை, அவிநாசியில் உள்ள 'சீடு'(seed) முதியோர் இல்லத்தில் விட்டுச் சென்றார் ஒரு இளைஞர்.
மூதாட்டிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. முதியோர் இல்ல நிர்வாகிகள், அவரை நல்ல முறையில் பராமரித்து வந்தனர். இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. அதுவரை வாய் திறக்காத மூதாட்டி மனம் திறந்து பேசினார்:
'நான் ஆதரவற்றவள் என்ற அடையாளத்துடன் இரண்டு ஆண்டுக்கு முன் என்னை இங்கு அழைத்து வந்து விட்டுச் சென்றானே ஒருவன்; அவன் என் மகன்தான்'
மூதாட்டியின் கண்கள் கசிந்தன.
''முதியோர் இல்லத்தில் வசிக்கும் எண்ணற்ற மூத்த குடிமக்களின் கசப்பு கலந்த வாழ்வியல் சூழல், இப்படி தான் இருக்கிறது'' என்கிறார். 'சீடு' அறக்கட்டளை நிர்வாகி கலைவாணி. அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
இதுவரை, 800க்கும் மேற்பட்ட முதியோரை பராமரித்திருக்கிறோம். 172 பேர் வயது மூப்பு காரணமாக இறந்துள்ளனர்; அவர்களை முறைப்படி அடக்கம் செய்து, ஆண்டுக்கொரு முறை திதி கொடுத்து, அவர்களது ரத்த உறவுகளை போன்று சேவையாற்றி வருகிறோம்.
உறவுகள் இருந்தும், அனாதை போன்று எங்களிடம் இருப்போரும் உண்டு; அவர்கள் இறந்து போகும் நிலையில், தகவல் சொன்னால் கூட அவர்களின் பிள்ளைகள் வருவதில்லை; 'கொஞ்சம் வேலையாக இருக்கோம்; நீங்களே காரியம் பண்ணிடுங்க'ன்னு சொல்லும் ஆட்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இறந்தவர்கள் பெயரில் சொத்து, பணம் எதுவும் இருந்தால், அதை வாங்குவதற்கு இறப்பு சான்றிதழ் கேட்டு மட்டும், சிலர் வருவர். எங்கள் சேவைக்கு அரசு மற்றும் தனிநபர்கள், தனியார் அமைப்பினர் இயன்றளவு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு, கலைவாணி கூறினார்.