/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாய் பஜனா மண்டலியில் நவராத்திரி சிறப்பு பூஜை
/
சாய் பஜனா மண்டலியில் நவராத்திரி சிறப்பு பூஜை
ADDED : செப் 27, 2025 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் காங்கயம் ரோடு, நல்லுார் ஸ்ரீசத்ய சாய் பஜனா மண்டலியில், நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.
தினமும் லலிதா சகஸ்ர நாமம், பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபா சகஸ்ரநாம பாராயணம் நடந்து வருகிறது. நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக, சுவாஸினி பூஜை நேற்று நடந்தது. அதில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களை, அம்மன் அவதாரமாக பாவித்து, பாதபூஜைகள் செய்து, ஆராதனை செய்யப்பட்டது. சாய் பக்தர்கள், நவராத்திரி விழாவை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.