ADDED : நவ 25, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், சிறப்புலி நாயனார் குருபூஜை நேற்று நடந்தது.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், நாயன்மார் குருபூஜை நடந்து வருகிறது. கார்த்திகை மாத பூராட நட்சத்திர நாளான நேற்று, சிறப்புலி நாயனார் குருபூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள், சிறப்புலி நாயனாருக்கு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் செய்தனர். சிவனடியார்களும், பக்தர்களும், தேவாரம், திருவாசகம், திருத்தொண்டத்தொகை பதிங்களை பாராயணம் செய்து வழிபட்டனர். வழிபாடு நிறைவாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

