/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாள் கோவில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
/
பெருமாள் கோவில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
ADDED : செப் 28, 2025 12:03 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பெருமாள் கோவில்களில் நேற்று, புரட்டாசி மாத, 2வது சனிக்கிழமை வழிபாடு கோலாகலமாக நடந்தது. திருப்பூர் ஸ்ரீவீரராகப்பெருமாள் கோவிலில், அதிகாலை, 5:30 மணிக்கு, ஸ்ரீவீரராகவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன், கருட வாகனத்தில் எழுந்தருளினார். மாலையில், பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், காலை மற்றும் மாலை நேரங்களில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள், பெருமாள் தாசர்களுக்கு, அரிசி, காய்கறிகளை படைத்து வழிபட்டனர்.
அவிநாசி அருகே தாளக்கரை ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், மொண்டிபாளையம் ஸ்ரீவெங்கடேசபெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி கரிவரதராஜ பெ ருமாள் கோவில்கள், அவிநாசி காரணப்பெருமாள் கோவில், உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும், சுவாமி புறப்பாடு, தாசர்களின் மயார் பூஜை வழிபாடுகள் நடந்தன.