ADDED : ஜூன் 17, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில், வாரந்தோறும் செவ்வாய்கிழமை, திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. ஆன்மிக சொற்பொழிவாளர் சிவ சண்முகம், திருவாதவூரடிகள் புராணம் வாயிலாக, மாணிக்க வாசக சுவாமிகளின் வரலாற்றை விவரிக்கிறார்.
அவ்வகையில், இன்று (17ம் தேதி) மாலை, 5:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை நடைபெறும் சொற்பொழிவில், அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.