ADDED : அக் 19, 2024 11:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: நேற்று அவிநாசி - திருப்பூர் ரோட்டில் அவிநாசிலிங்கம் பாளையம் அருகே ரோட்டை புள்ளிமான் கடந்தது.
அப்போது வாகனம் மோதியதில் அடிபட்டது. வனத்துறைக்கு அளித்த தகவலின் பேரில் வனவர் சங்கீதா உள்ளிட்ட வனத்துறையினர் அடிபட்ட மானை மீட்டு சிகிச்சைக்காக கருணை பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி மான் இறந்தது.
இறந்தது, இரண்டு வயதான பெண் புள்ளிமான் என்று தெரியவந்தது.