ADDED : ஜூலை 28, 2025 09:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவிலில், அருணகிரிநாதர் இசை விழா ஆக., 1ல் நடக்கிறது.
உடுமலை அருணகிரிநாதர் இசை விழாக்குழு சார்பில், ஸ்ரீ அருணகிரிநாதர் 53ம் ஆண்டு இசை விழா ஆக., 1ம் தேதி மாலை, 6:00 மணிக்கு மாரியம்மன் கோவில் கலையரங்கில் நடக்கிறது.
இதையொட்டி, சேக்ஸபோன் சிறப்பு இசை நிகழ்ச்சிச்சி நடைபெறுகிறது.
முன்னதாக, பிரசன்ன விநாயகர் கோவிலில் அன்று காலை, 7:00 மணிக்கு அருணகிரி நாதருக்கு அபிேஷக ஆராதனைகள் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை, அருணகிரிநாதர் இசை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

