sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொதுத்தேர்வு மாணவருக்கு ஸ்ரீஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு

/

பொதுத்தேர்வு மாணவருக்கு ஸ்ரீஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு

பொதுத்தேர்வு மாணவருக்கு ஸ்ரீஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு

பொதுத்தேர்வு மாணவருக்கு ஸ்ரீஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு


ADDED : பிப் 17, 2024 01:40 AM

Google News

ADDED : பிப் 17, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு வழிபாடு, நாளை (18ம் தேதி) நடக்கிறது.

திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்காக, ஆண்டு தோறும் ஸ்ரீஹயக்ரீவர் வழிபாடு நடக்கிறது. இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான சிறப்பு வழிபாடு, கடந்த வாரம் துவங்கியது.

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, நாளை (18ம் தேதி), சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. காலை, 9:00 மணிக்கு, சிறப்பு வேள்வி, திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், கூட்டு பஜனையுடன், சிறப்பு வழிபாடு நடக்கிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் பெயர் மற்றும் நட்சத்திர பெயரில் அர்ச்சனை செய்யப்படும். தொடர்ந்து, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான சிறப்பு வழிபாடு, வரும் 25, மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது.

பொதுத்தேர்வை வெற் றிகரமாக எதிர்கொள்ள, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாட்டில் பங்கேற்று, பயன்பெறலாம் என, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us