/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பார்வை' வழங்கிய ஸ்ரீசத்ய சாய் மையம்
/
'பார்வை' வழங்கிய ஸ்ரீசத்ய சாய் மையம்
ADDED : செப் 07, 2025 10:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. இம்மாத இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் பி.என்., ரோடு மில்லர் பஸ் ஸ்டாப் ஸ்ரீ சத்ய சாய் சேவா மையத்தில் நேற்று நடந்தது.
இதில், 204 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கண்ணின் தன்மை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. 37 பேர் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 84 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.