/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 15ம் தேதி துவங்குகிறது 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
/
வரும் 15ம் தேதி துவங்குகிறது 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
வரும் 15ம் தேதி துவங்குகிறது 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
வரும் 15ம் தேதி துவங்குகிறது 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : ஜூலை 08, 2025 12:39 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள், வரும் 15 ம் தேதி முதல் நடைபெற உள்ளன.
மாநகராட்சி பகுதியில் 20, நகராட்சிகளில் 56; பேரூராட்சிகளில் 28; ஊராட்சிகளில் 221 என, மாவட்டம் முழுவதும் மொத்தம் 325 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இதில், நகர பகுதிகளில் 13 அரசுத்துறைகள் மூலமாக 43 சேவைகளும்; கிராம பகுதிகளில், 15 துறைகள் மூலம், 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள, விடுபட்ட பெண்கள், இம்முகாமில் பங்கேற்று, விண்ணப்பம் அளிக்கலாம்.
தன்னார்வலர்கள் வாயிலாக, வீடு வீடாக சென்று, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமிற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, நேற்று முதல் துவங்கியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலம், அவிநாசி ஒன்றியத்தில், கணியம்பூண்டி ஊராட்சி உள்பட மாவட்டம் முழுவதும், வீடு வீடாக செல்லும் தன்னார்வலர்கள், பொதுமக்களிடம், விண்ணப்ப படிவங்களை வழங்கிவருகின்றனர்.