/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில சாகச பயிற்சி முகாம்; சிக்கண்ணா மாணவர் தேர்வு
/
மாநில சாகச பயிற்சி முகாம்; சிக்கண்ணா மாணவர் தேர்வு
மாநில சாகச பயிற்சி முகாம்; சிக்கண்ணா மாணவர் தேர்வு
மாநில சாகச பயிற்சி முகாம்; சிக்கண்ணா மாணவர் தேர்வு
ADDED : ஆக 17, 2025 11:45 PM

திருப்பூர்; நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், சேலம் மாவட்டம், ஏற்காட்டில், மாநில அளவிலான சாகச பயிற்சி முகாம், இன்று துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பல் கலைக்கழகங்களில் இருந்து 130 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில், பங்கேற்க பாரதியார் பல்கலையில் இருந்து, எட்டு பேர் (தலா, நான்கு மாணவ, மாணவியர்) தேர்வு செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2ஐ சேர்ந்த மாணவர் கிருஷ்ணமூர்த்தி (கணிதவியல் துறை) தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லுாரி மாணவர். மாணவரை முகாமுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பாரதியார் பல்கலை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், அலகு-2 அலுவலர் மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.