/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில செஸ் போட்டி; மாணவர்கள் ஆர்வம்
/
மாநில செஸ் போட்டி; மாணவர்கள் ஆர்வம்
ADDED : பிப் 10, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் ரோட்டரி ரெயின்போ சார்பில், மாநில அளவிலான செஸ் போட்டிகள், தனியார் மண்டபத்தில் நடந்தது.
ரோட்டரி சங்க நிர்வாகி முத்துக்குமார் தலைமை வகித்தார். துணை கவர்னர் சுரேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராம், மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 9 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் அனைத்து வயது பிரிவினருக்கான செஸ் போட்டிகள் நடந்தன.
நிகழ்ச்சியில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிலையில், போட்டியின் இறுதியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

