
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கல்லுாரி நாட்டுநலப்பணி திட்டம் சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் (அலகு -2) சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். சட்ட உதவி மைய வக்கீல் கவுசல்யா, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவர்கள் உறுதிமொழி மேற்கொண்டனர். ஏற்பாடுகளை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.