/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீட்' தேர்வு பயிற்சியில் மாணவர்கள் ஆர்வம்
/
'நீட்' தேர்வு பயிற்சியில் மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஏப் 23, 2025 12:27 AM

உடுமலை; உடுமலையில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியில், மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி நடக்கிறது.
நடப்பாண்டுக்கான மருத்துவ கல்லுாரி சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு, மே 4ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இத்தேர்வு எழுதுவதற்கு, இலவச பயிற்சி வகுப்பு ஒவ்வொரு பகுதிகளிலும் வழங்கப்படுகிறது.
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, உடுமலை - திருப்பூர் ரோட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பயிற்சி நடக்கிறது. காலை, 9:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.
உடுமலை சுற்றுப்பகுதியில், 22 மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கின்றனர். மே 3ம் தேதி வரை பயிற்சி வகுப்பு நடக்கிறது. மாவட்ட அளவிலான கருத்தாளர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியில் மாணவர்களுக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன.