/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர் திறனாய்வு தேர்வு 20க்குள் விண்ணப்பிக்கலாம்
/
மாணவர் திறனாய்வு தேர்வு 20க்குள் விண்ணப்பிக்கலாம்
மாணவர் திறனாய்வு தேர்வு 20க்குள் விண்ணப்பிக்கலாம்
மாணவர் திறனாய்வு தேர்வு 20க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 18, 2025 07:54 AM
திருப்பூர்: மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில், ஆண்டுதோறும் அரசு, அரசு உதவி பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வரை கல்வி பயில மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. வரும், 2026 ஜன. 10ம் தேதி இத்தேர்வு நடக்கவுள்ளது.
தேர்வெழுத விருப்பமுள்ள மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வரும் 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பதிவிறக்கம், பூர்த்தி செய்து வழங்குவது உள்ளிட்டவை குறித்து தலைமை ஆசிரியர்கள். மாணவருக்கு வழிகாட்ட வேண்டும் என தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

