/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அருங்காட்சியகத்திற்கு மாணவர்கள் களப்பயணம்
/
அருங்காட்சியகத்திற்கு மாணவர்கள் களப்பயணம்
ADDED : நவ 18, 2024 10:29 PM

உடுமலை; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் களப்பயணம் அழைத்துச்செல்லப்பட்டனர்.
கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், கோவை ஜி.டி., நாயுடு அருங்காட்சியகத்துக்கு களப்பயணம் சென்றனர்.
அதில் இந்திய கார்கள் குறித்த அரங்குகளை பார்வையிட்டனர். அதன் பயன்பாடுகள் குறித்தும் ஆசிரியர்கள் விளக்கமளித்தனர். தொடர்ந்து அதில் இன்று வரை பயன்பாட்டில் உள்ள கார்களையும், மாணவர்கள் பார்வையிட்டனர்.
அறிவியல் கண்காட்சியில் அங்குள்ள கண்டுபிடிப்புகள், டைப்ரைட்டிங் பொருட்கள், திட, திரவ, வாயுக்களால் ஆன பொருட்களையும் மாணவர்கள் கண்டு மகிழ்ந்தனர்.