sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

/

செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு

செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டி மாணவர்கள் பங்கேற்க அழைப்பு


ADDED : ஏப் 23, 2025 12:42 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டிகள், மே, 9ம் தேதியும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், 10ம் தேதியும் நடைபெற உள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன், 3ம் தேதி செம்மொழி நாள் விழா கொண்டாடப்படுகிறது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் நடப்பாண்டு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள், மே, 9ம் தேதியும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், 10ம் தேதியும் நடைபெற உள்ளன. திருப்பூர் - பல்லடம் ரோட்டிலுள்ள எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் போட்டிகள் நடைபெறும்.

போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், தமிழ் வளர்ச்சித்துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்கிற தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியரின் பரிந்துரை கடிதத்துடனும், கல்லுாரி மாணவர்கள், முதல்வர் அல்லது துறை தலைவரின் பரிந்துரை கடிதத்துடனும் வரும், 30ம் தேதிக்குள், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில், நேரில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விபரங்களுக்கு, 93614 61882, 87606 06234 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பரிசுத்தொகை எவ்வளவு?


மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறுபவர்கள், மே, 17ம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.

கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்போருக்கு, 10 ஆயிரம், மாநில அளவில் முதலிடத்துக்கு, 15 ஆயிரம், மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடிப்போருக்கு, 7 ஆயிரம், மாநில அளவில் இரண்டாமிடத்துக்கு, 10 ஆயிரம், மாவட்ட அளவில் மூன்றாமிடத்துக்கு, 5 ஆயிரம், மாநில அளவில் மூன்றாமிடத்துக்கு, 7 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us