sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாவட்டத்தில் வேளாண் சார்ந்த நிறுவனங்களுக்கு மானிய திட்டம்

/

மாவட்டத்தில் வேளாண் சார்ந்த நிறுவனங்களுக்கு மானிய திட்டம்

மாவட்டத்தில் வேளாண் சார்ந்த நிறுவனங்களுக்கு மானிய திட்டம்

மாவட்டத்தில் வேளாண் சார்ந்த நிறுவனங்களுக்கு மானிய திட்டம்


ADDED : அக் 10, 2025 12:26 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கபடுகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், விவசாயம், கால்நடை, மீன்வளம் போன்ற பல்வேறு வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில், புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

புதிதாக துவங்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதோடு, விற்பனை சந்தையை விரிவுப்படுத்த முயற்சிக்கும் புத்தாக்க நிறுவனங்களுக்கு, ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது.

புத்தாக்க நிறுவனம், 'டான்சிம்' மற்றும் 'ஸ்டார்ட் அப் இந்தியா' ஆகியவற்றில் பதிவு செய்திருக்க வேண்டும். இறுதி, 3 ஆண்டு லாபம், ரூ. ஐந்து இலட்சத்தை விட குறைவாக இருக்க வேண்டும்.

மேலும், இத்திட்டத்தில் பயனடைய, agrimark.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களுக்கு ddab.tiruppur@gmail.com என்ற இ-மெயில் அல்லது வேளாண்மை துணை இயக்குநர், (வேளாண் வணிகம்) திருப்பூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us