/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கிய பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரையின்றி தவிப்பு
/
முக்கிய பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரையின்றி தவிப்பு
ADDED : மார் 12, 2024 01:01 AM
உடுமலை;உடுமலை யூனியன் ஆபீஸ் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை தளி ரோடு வழியாக, திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னார் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், சுற்றுலா வாகனங்களும், கார், லாரி போன்ற ஏராளமான வாகனங்கள் அந்த ரோட்டில் செல்கின்றன. இந்த ரோட்டில் முக்கியமான பஸ் நிறுத்தமாக யூனியன் ஆபீஸ் உள்ளது. இதை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரை இல்லாததால், பயணியர், மாணவர்கள், பொதுமக்கள் வெயிலில், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அந்த இடத்தில் நிழற்கூரை அமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

