ADDED : ஏப் 17, 2025 10:24 PM
உடுமலை,; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட உள்ள கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட விளையாட்டரங்கில் வரும், 25 முதல், மே, 15 வரை 21 நாட்கள், கோடைக்கால பயிற்சி முகாம் நடக்கிறது; 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் மாணவர் அல்லாதோரும் பங்கேற்கலாம்.
----தடகளம், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, பேட்மின்டன், குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில், பங்கேற்க விரும்புவோர், வரும், 24ம் தேதி, மாலை 6:00 மணி வரை, மாவட்ட விளையாட்டு அரங்கில் பெயர் பதிவு செய்யலாம். மேலும் தகவல்களுக்கு, 2244899, 86109 00142 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.