/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கல்
/
அரசு பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கல்
ADDED : பிப் 24, 2026 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை பகுதியிலுள்ள, 57 அரசுப்பள்ளிகளுக்கு, தனியார் நிறுவனம் சார்பில், 20 லட்ச ரூபாய் மதிப்பிலான தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது.
உடுமலை பள்ளபாளையம், குரல்குட்டை, கொம்மேகவுண்டன்துறை, கல்லாபுரம், பாலப்பம்பட்டி உள்ளிட்ட பள்ளிகளுக்கு, டெஸ்க் உள்ளிட்ட தளவாட பொருட்கள், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி வாயிலாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர், தனியார் நிறுவன அலுவலர்கள், கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

