ADDED : செப் 22, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி,2 வது வார்டுக்கு உட்பட்ட சவுடப்பன் கோவில் நகர் முதல் மற்றும் இரண்டாவது வீதிகளில் தெரு விளக்குகள் முறையாக பயன்படுத்த முடியாமல் இருந்தது.
மேலும் தெருவில் குப்பை அகற்றும் பணியிலும் சுணக்கம் நிலவியது.அதே போல், 3வது வார்டு அம்மன் நகர் 2 மற்றும் 3 ஆகிய வீதிகளிலும் இதே பிரச்னை நிலவியது. இது குறித்த புகார்களின் பேரில் மேயர் தினேஷ்குமார் அப்பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.