
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் கோட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று, குமார் நகர் அலுவலகத்தில் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை வகித்தார்; செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் கொடுத்த மனுவில், 'எம்.எஸ்., நகர் கருப்பராயன் கோவில் அருகே, ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். போர்க்கால அடிப்படையில், பழுதான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்,' என்று வலியுறுத்தினார்.

