sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள்'; விருது பெற்ற விவசாயி சொல்கிறார்

/

'இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள்'; விருது பெற்ற விவசாயி சொல்கிறார்

'இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள்'; விருது பெற்ற விவசாயி சொல்கிறார்

'இயற்கை விவசாயத்துக்கு மாறுங்கள்'; விருது பெற்ற விவசாயி சொல்கிறார்


ADDED : ஜூன் 15, 2025 11:13 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; ''விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்'' என, தமிழக கவர்னரிடம் விருது பெற்ற இயற்கை விவசாயி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, டெல்லி வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் சார்பில், இயற்கை விவசாயிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை ராஜ் பவனில் நடந்தது. இதில் பல்லடம் அடுத்த, கேத்தனுார் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பழனிசாமிக்கு, 80 சிறந்த இயற்கை விவசாயிக்கான விருதை கவர்னர் ரவி வழங்கினார்.

பழனிசாமி கூறியதாவது:

கடந்த ஆண்டு, தமிழக அரசு சார்பில், முதல்வர் கையால் நம்மாழ்வார் விருது கிடைத்தது. தற்போது, கவர்னர் மூலம் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

முன்னதாக, கவர்னர், 'பாரதி வனம்' பெயரில் வனம் உருவாக்கி அதில் எங்கள் பெயரில் மரக்கன்றுகள் நடவைத்தார். 'இயற்கை விவசாயம்தான் உடலை பேணி காக்கும். காற்று மாசு ஏற்படாமல் இருக்க மரங்கள் கட்டாயம் வளர்க்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் மூலம் நம்மாழ்வார் விருது ஆண்டுதோறும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இயற்கை விவசாயத்தை கவர்னர் ஊக்கப்படுத்துகிறார். 'அடி, காட்டுக்கு, நடு மாட்டுக்கு, மேல் வீட்டுக்கு' என, தமிழின் சிறப்பை எடுத்துரைத்து பேசினார்.

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி மண்ணை மலடாக்கியதால், அதில் விளையும் காய்கறிகளும் மலடாகின. இவற்றை உண்ணும் இந்த சமுதாயமும் மலடானதால், மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மருத்துவமனைகளும் பெருகிவிட்டன.

இயற்கை விவசாயத்துக்கு விவசாயிகள் அனைவரும் வர வேண்டும், நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us