ADDED : மார் 01, 2026 06:45 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், நிர்வாக வசதிக்காக, ஒன்பது தாசில்தார்கள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
பல்லடம் தாசில்தார் ராஜேஷ்குமார், மக்கள் தொகை கணக்கு பணி தாசில்தாராகவும்; பல்லடம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜகுமார், காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும்; காங்கயம் ஆதிதிராவிடர் நல தாசில்தார் கோவிந்தசாமி, பல்லடம் தாசில்தாராகவும்; காங்கயம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பானுமதி, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜலஜா, தாராபுரம் முத்திரைத்தாள் தனி தாசில்தாராகவும்; அங்கிருந்த புவனேஸ்வரி, உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும்; மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தாசில்தார் சந்திரசேகர், கலால் உதவி கமிஷனர் அலுவலக மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில வாணிப கழக கிடங்கு மேலாளர் பாபு, பல்லடம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும்; திருப்பூர் வடக்கு குடிமைப்பொருள் வழங்கல் தனி தாசில்தார் ராகவி, திருப்பூர் தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில் தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக நலன்கருதி தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; பணியேற்பில் தாமதம் ஏற்பட்டால், சம்பளம் இல்லாத அசாதாரண விடுப்பு காலமாக கருதப்படும்; உடனடியாக பதவியேற்று, தகவல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

