sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 தாலுகா அலுவலகம் முற்றுகை

/

 தாலுகா அலுவலகம் முற்றுகை

 தாலுகா அலுவலகம் முற்றுகை

 தாலுகா அலுவலகம் முற்றுகை


ADDED : நவ 25, 2025 06:04 AM

Google News

ADDED : நவ 25, 2025 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தாராபுரம் அருகே அலங்கியம் பகுதியில், 60 குடும்பத்தினர் அங்குள்ள இடத்தில் வீடு கட்டி வசிக்கின்றனர். இவர்கள், 3 ஆண்டாக தங்கள் இடத்துக்கு பட்டா கேட்டு வருவாய் துறையை அணுகி வருகின்றனர்.

பல போராட்டம் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், ஆவேசமடைந்த அப்பகுதியினர் நேற்று காலை தாராபுரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு, தாசில்தார் வாகனத்தை சிறைப்பிடித்து அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பொதுமக்களிடம், தாசில்தார் ராமலிங்கம் பேச்சு நடத்தினார். அதில், 'சமீபத்தில் தான் பதவியேற்றுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும்,' தெரிவித்தார்.

இதனால், பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டைகளை ஆகியவற்றை, தங்களது மனுவுடன் இணைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us