sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கோரிக்கைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு; வேளாண் அலுவலர்கள் சங்கம் வேதனை

/

கோரிக்கைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு; வேளாண் அலுவலர்கள் சங்கம் வேதனை

கோரிக்கைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு; வேளாண் அலுவலர்கள் சங்கம் வேதனை

கோரிக்கைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு; வேளாண் அலுவலர்கள் சங்கம் வேதனை


ADDED : ஆக 03, 2025 09:12 PM

Google News

ADDED : ஆக 03, 2025 09:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால், மன உளைச்சலுடன் பணியாற்றி வருகிறோம்; கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசு முதன்மை செயலருக்கு, தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தினர் மனு அனுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தினர், ஆறு அம்ச கோரிக்கைகள் குறித்து, இரண்டு ஆண்டுகளில் பல முறை தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினர்.

எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றியதுடன், சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வாயிலாக கோரிக்கை மனுவும் சமர்ப்பித்துள்ளனர்.

இச்சங்கத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் வைரமுத்து, மாவட்ட செயலாளர் பாலு, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கூறியதாவது:

வேளாண் - உழவர் நலத்துறையில் களப்பணி செய்யும் உதவி வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் வணிக அலுவலர்கள், அதிக வருவாய் கிராம எண்ணிக்கையிலான ஒதுக்கீடு காரணமாக, திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில், பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கின்றனர்.

கடந்த 2023 பட்ஜெட்டில், உழவர் அலுவலர் தொடர்பு திட்டம், 2.0 வாயிலாக, 3 அல்லது 4 கிராமங்களுக்கு, ஒரு கிராம வேளாண் விரிவாக்க அலுவலர் பணியிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உதவி வேளாண் அலுவலர்களுக்கு, திட்ட இலக்கை அதிகளவு நிர்ணயித்து, அரசு விடுமுறை நாட்களிலும், காலை, 8:00 மணி முதல் பணி செய்ய உதவி நிர்பந்திக்கின்றனர். இதனால், இந்த அலுவலர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சாகுபடிக்கு பிந்தைய காலத்தில், இடுபொருட்களை கூடுதலாக இருப்பு வைப்பதால், அவை காலாவதியாகும் நிலை ஏற்படுகிறது. இந்த இடுபொருட்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள் மட்டுமே பொறுப்பு என நிர்ணயித்து, தணிக்கை தடை மற்றும் ஊதியத்தில் பணப்பிடித்தம் செய்கின்றனர். இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.

இவ்வாறு, 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர்ந்து போராடி வருகிறோம். விரைவில் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us