sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

டிரைவர் மீது ஆசிரிய தம்பதி புகார் 

/

டிரைவர் மீது ஆசிரிய தம்பதி புகார் 

டிரைவர் மீது ஆசிரிய தம்பதி புகார் 

டிரைவர் மீது ஆசிரிய தம்பதி புகார் 


ADDED : ஜூன் 01, 2025 07:19 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் : தாராபுரத்தில், பக்கத்து வீட்டில் வசிக்கும் அரசு பஸ் டிரைவர் தங்களை மிரட்டுவதாக, ஆசிரிய தம்பதியினர் குடும்பத்துடன் எஸ்.பி., யிடம் புகார் அளித்தனர்.

தாராபுரம், சபரி அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். அவர் மனைவி கடல் செல்வி. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர். தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவரும், நேற்று திருப்பூர், எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

எங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அரசு பஸ் டிரைவர் இருளப்பன், வீடு கட்டும் போது பணம் கடன் வாங்கினார். அதன்பின்னும் அடிக்கடி பணம் கேட்பது வழக்கமாக மாறியது.

சில நேரங்களில் வரம்பு மீறி நடந்துள்ளார். இது குறித்து கேட்டால், குடும்பத்தோடு கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us