ADDED : ஜன 03, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:காங்கயம், பாரதியார் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார், 34; தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் காங்கயம் - நத்தக்காடையூர் ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
படுகாயமடைந்த தினேஷ்குமாரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.