
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, நல்லுார்பாளையம் கிராமத்தில், 18 அடி உயரத்துடன் ஸ்ரீஅதர்வண பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறார்.
கோவில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் சிறப்பு வேள்வி வழிபாடுகளை துவக்கி வைத்தார்.
விநாயகர் பூஜை, நவகிரக வேள்வி, லட்சுமி பராசக்தி வேள்வி ஆகியவற்றுடன் ஆண்டு விழா துவங்கியது. 108 சங்காபிஷேகம் மற்றும் நவசக்தி மகா யாகம் நடந்தது. இதையடுத்து, மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீஅதர்வண பத்ரகாளி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.