
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேவூர் அருகே வேட்டுவபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அசநல்லி பாளையத்தில் ஏரி கருப்பராயசாமி கோவில்உள்ளது. இதன் கும்பாபிேஷகம் நடந்தது.
முன்னதாக சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
நேற்று காலை இரண்டாம் கால வேள்விப் பூஜையுடன் விமானங்கள், மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின், விநாயகர், ஏரி கருப்பராயசாமி, கன்னிமார், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், மதுரை வீரன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்பட்டது.

